மணிக்கணக்கில் மனம் விட்டுப் பேசி மகிழ்ந்த நாட்கள் சென்று,
மலர் போலும் கண்மணியின் சிமிட்டில் சிரித்த கணங்கள் சென்று,
மெல்லிடையாள் கரம் பற்றி சிலிர் சிலிர்த்த மையல் சென்று,
மகரந்தப் பூவுந்தன் வாசம் நுகர்ந்த பொழுதும் சென்று,
மடி மீது மகள் போலே தலை சாய்த்த இரவும் சென்று,
மனையாளாய் வரும் நாளும் வருமென்ற கனவும் சென்று,
மரக்கட்டை போல் நானும் அசைவற்றுக் கிடக்கின்றேன்!
மதி மயங்கி உன் நினைவால் மனதுக்குள் சாகின்றேன்!